விருதுநகர்: திருமணம் முடிந்த 4 நாட்களில் விபத்தில் மூளைச்சாவு அடைந்து பலி.. 4 பேருக்கு மறுவாழ்வு..!
Virudhunagar New Married Girl Brain Death an Accident his Organ Donate 4 Peoples Live 20 June 2021
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மறவற்பெருங்குடி கிராமத்தை சார்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் சங்கர் ராஜ் (வயது 27). இவர் சென்னையில் இருக்கும் நகைக்கடையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், அங்குள்ள விருதுநகர் அருகேயுள்ள சுத்தமடம் கிராமத்தை சார்ந்த வேலுசாமி என்பவரது மகள் முத்துமாரிக்கும் (வயது 24) கடந்த 13 ஆம் தேதி திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இதனையடுத்து, பந்தல்குடி பகுதியில் இருக்கும் தனது உறவினரின் வீட்டிற்கு சென்ற சங்கர் ராஜ் மற்றும் முத்துமாரி, விருந்தில் கலந்துகொண்டு கடந்த 16 ஆம் தேதி மறவற்பெருங்குடி கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்துள்ளனர்.
இதன்போது, இவர்களின் இருசக்கர வாகனம் திடீரென நிலைதடுமாறவே, தம்பதிகள் இருவரும் கீழே தவறி விழுந்துள்ளார். இதன்போது, முத்துமாரியின் தலையில் பலத்த காயம் ஏற்படவே, உடனடியாக அங்குள்ள திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்படவே, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி முத்துமாரி மூளைச்சாவு அடைந்துள்ளார். மருத்துவர்களின் அறிவுரைக்கு பின்னர், முத்துமாரியின் உடல் உறுப்புக்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் கணவர் சம்மதத்துடன் தானம் செய்யப்பட்டது.
முத்துமார்யின் சிறுநீரகம், இதயம், நுரையீரல் மற்றும் கல்லீரல் போன்றவை தானம் செய்யப்பட்டு, இதனால் 4 பேர் மறுவாழ்வு பெற்றனர். புதுமண பெண் திருமணம் நடந்த 4 நாட்களுக்கு உள்ளாகவே விபத்தில் சிக்கி மரணமடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Virudhunagar New Married Girl Brain Death an Accident his Organ Donate 4 Peoples Live 20 June 2021