இரண்டு வருடமாக பிரிந்திருந்த கணவன்.. கள்ளக்காதலனுடன் விருந்து சாப்பிட்ட மனைவி..!! நொடியில் அரங்கேறிய சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி நாராயணபுரம் பகுதியை சார்ந்தவர் விக்னேஷ் குமார் (வயது 26). இவரது மனைவி தனலட்சுமி. இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த இரண்டு வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 

விக்னேஷ் குமார் சிவகாசியிலும், தனலட்சுமி சாத்தூர் அருகேயிருக்கும் படந்தாள் பக்கத்திலும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், தனலட்சுமிக்கும், அப்பகுதியில் வசித்து வந்த சதிஷ் (வயது 25) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். 

இந்த நிலையில், விக்னேஷ் குமார் திடீரென தனது மனைவியின் இல்லத்திற்கு வருகை தரவே, சதீஷும் - தனலட்சுமியும் வீட்டிற்குள் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை விக்னேஷ் கண்டு அதிர்ச்சிக்கு உள்ளாகவே, கடுமையான ஆத்திரத்துக்கு உள்ளாகி சதீஷை கல்லால் தாக்கிவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளார்.

சதீஷை மீட்ட உறவினர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க முயற்சிக்கவே, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சதீஷின் உடலை கைப்பற்றியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக தனலட்சுமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தப்பியோடிய விக்னேஷ் குமாரை தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhunagar murder due to illegal affair police investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->