காதல் திருமணம்.. ஒன்றரை வருடத்தில் சந்தேக தீ.. துள்ளத்துடிக்க அரங்கேறிய சோகம்.!!
Virudhunagar murder case police investigation
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பட்டாசு தொழிற்சாலை வாகன ஓட்டுனராக பணியாற்றி வந்தவர் சரவணகுமார். இவரது வாகனத்தில் தொழிற்சாலைக்கு பணிக்காக வந்து சென்றவர் ஜெயலட்சுமி. இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு, சரவணகுமார் ஜெயலட்சுமியை கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், தனது மாமியாரின் வீட்டின் அருகே ஒரு வீடு பார்த்து ஜெயக்குமார் குடித்தனம் நடத்தி வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கயல் என்ற எட்டு மாத பெண் குழந்தை உள்ள நிலையில், ஜெயலட்சுமி நடத்தையில் சந்தேகம் கொண்டு சரவணகுமார் அவரை அடித்து துன்புறுத்தியதாக தெரிய வருகிறது.
இதனால் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு நேரத்தில் கணவன் - மனைவிக்கிடையே மீண்டும் சண்டை ஏற்படவே, தனது மனைவியை வேலைக்கு போக வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனையடுத்து ஜெயலட்சுமி தனது குழந்தையுடன் தாய் வீட்டிற்குச் சென்ற நிலையில், வெள்ளிக்கிழமை மதிய நேரத்தில் சமாதானம் பேசி தனது மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
பின்னர் தனது காதல் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளான். இதில் படுகாயமடைந்த ஜெயலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், ஜெயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், தனது மகளுக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து ஜெயலட்சுமியின் தாய் கதறி அழுத நிலையில், அங்குள்ள செங்கமலப்பட்டி கண்மாயில் பதுங்கியிருந்த சரவணகுமாரை காவல்துறையினர் கைதுசெய்தனர். தந்தையும் ஜெயிலுக்கு சென்று விட, எந்தவிதமான சூழ்நிலையையும் அறியாத பச்சிளம் குழந்தை தாயை நினைத்து ஏங்கி எழுதுவது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tamil online news Today News in Tamil
English Summary
Virudhunagar murder case police investigation