பட்டாசு ஆலைகள் மூடல்.. விதிக்கப்படும் கட்டுப்பாடு.. விருதுநகரில் உச்சமாகும் கொரோனா.!!
Virudhunagar Lockdown due to increase corona cases
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மக்களின் வாழ்வாதாரமானது கடுமையான அளவு பாதிக்கப்பட்டது. மேலும், நோயின் பரவலானது கடுமையான அளவு அதிகரித்துள்ளது.
இதனால் தளர்வுடலுடன் கொண்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், மாவட்ட வாரியாக கடுமையான அளவு கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது பரவ துவங்கியுள்ளது. இதனால் மக்களுக்கிடையே அச்ச உணர்வானது மீண்டும் அதிகரித்துள்ளது.
தற்போது விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா திடீரென உச்சகட்டத்தை எட்டியது. கடந்த ஒருவாரத்திற்குள்ளாகவே மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து 100 யை தொடும் வகையிலும், நூறுக்கும் அதிகமான எண்ணிக்கையிலும் கொரோனா உறுதியாகி வருகிறது.
இதனால் பட்டாசு ஆலைகள் சங்கத்தின் சார்பாக பட்டாசு ஆலைகள் வரும் 19 ஆம் தேதி வரை மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது அம்மாவட்டத்தின் 16 எல்லைகளும் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைப்போன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரான இராசபாளையம் பகுதியிலும் காலை 6 மணிமுதல் மதியம் 2 மணிவரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என்று காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் வணிகர் சங்கமும் அறிவித்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Virudhunagar Lockdown due to increase corona cases