வேலைக்கு செல்லாமல் வீட்டில் வெட்டியாக படுத்து உறங்கிய கணவன்.. சொல்லியும் கேட்காததால் மனைவி தற்கொலை.!
Virudhunagar Aruppukkottai Woman Suicide due to Husband Jobless 26 June 2021
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை வில்லுபத்திரி கிராமத்தை சார்ந்தவர் பாண்டி (வயது 33). இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கும், தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டையை சார்ந்த திருமலைச்செல்வி (வயது 26) என்ற பெண்ணிற்கும் 6 வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இவர்களுக்கு திவ்யா என்ற 5 வயது குழந்தையும், காவ்யா என்ற 4 வயது குழந்தையும் உள்ள நிலையில், கடந்த சில மதத்துக்கு முன்னதாக பாண்டி தனது குடும்பத்துடன் தென்தாமரைக்குளம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்துள்ளனர். பாண்டி கட்டிட வேளைக்கு சென்று வந்த நிலையில், திடீரென பணிகளுக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
இதனால், குடும்பத்தை நடத்த இயலாமல் திருமலைச்செல்வி தவித்த நிலையில், கணவரிடம் பலமுறை எடுத்து கூறியும் பலனில்லை. நேற்று காலையும் பாண்டி வழக்கம்போல பணிக்கு செல்லாமல் இருந்தததால் கணவன் - மனைவிடையே தகராறு ஏற்படவே, பாண்டி வெளியே சென்றுள்ளார்.
இதன்போது, மனவேதனையில் இருந்து வந்த திருமலைச்செல்வி அரளி விதையை அரைத்து தனது 2 மகள்களுக்கு கொடுத்து, தானும் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவர்கள் 3 பேரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் வீட்டில் மயங்கி இருந்துள்ளனர்.
கோபம் குறைந்ததும் வீட்டிற்கு வந்த பாண்டி, தனது மனைவி மற்றும் குழந்தைகள் வாயில் நுரைதள்ளிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக அவர்களை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பவே, சம்பவ இடத்தில் மேற்கொண்ட முதலுதவி சிகிச்சையில் குழந்தைகள் உயிர் பிழைத்தனர்.
மனைவி மட்டும் மயக்க நிலையில் இருக்கவே, அவரை அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விரைந்து சென்று திருமலைச்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Virudhunagar Aruppukkottai Woman Suicide due to Husband Jobless 26 June 2021