காவலராக வீட்டிற்கு செல்ல வேண்டிய இளைஞர், மைதானத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. தந்தை கண்ணீர்.!
Virudhunagar Alagapuri Youngster Marimuthu Died Police Selection
தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வில் கலந்துகொள்ள வந்த இளைஞர், மைதானத்தில் ஓடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் ஆகிய பணிகளுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் உடற்கூறு தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வில் சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமான தேர்வர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வின் போது அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளவீடு செய்தல், உடல்தகுதி தேர்வு, ஓட்ட சோதனை போன்றவை நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் கலந்துகொண்ட விருதுநகர் மாவட்டம் அழகாபுரி பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்ற இளைஞர், 1500 மீட்டர் ஓட்ட சோதனையின் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மைதானத்திலேயே பரிதாபமாக மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த மாரிமுத்துவின் தந்தை தங்கராஜ், தனது மகனின் உடலை கட்டியணைத்து கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Virudhunagar Alagapuri Youngster Marimuthu Died Police Selection