இந்த மந்திரத்தை சொல்லி பூஜித்து மன நிம்மதியை அளிக்கும்..!
Vinayakar Manthra
இந்துக்கள் முதல் கடவுள் என விநாயகரை முதல் கடவுளாக வழிப்படுவர். கணங்களின் அதிபதி என்பதால் அவன் கணபதி என அழைக்கப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன. எந்த காரியத்தை ஆரம்பிப்பதற்கு முன்னரும் விநாயகரை வழிப்பட்ட பின்னர் ஆரம்பிப்பர். சிலருக்கு எந்த செயல் செய்தாலும் அதில் தடை ஏற்படும் அவர்கள் எல்லாம் விநாயகர் ஸ்லோகம் சொல்லி வர தடைகள் அகலும்.
மஹாகணபதிர் புத்தி பிரிய :க்ஷிப்ர பிரசாதன
ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமா புத்தரோ க நாசன||
பூஜை அறையில் விளக்கேற்றி இந்த ஸ்லோகத்தை தினமும் 18 முறை சொல்லி வர வேண்டும். அப்படி செய்து வர பல காரிய தடைகள் நீங்கி நினைத்த காரியம் கைக்கூடும்.