#BigBreaking : விழுப்புரத்தில் பெரும் பரபரப்பு.! கடத்தப்பட்ட 16 வயது பள்ளி மாணவி சடலமாக மீட்பு.!  - Seithipunal
Seithipunal


செஞ்சி அருகே மூன்று நாட்களுக்கு முன்பு காணாமல் போன 16 வயது பள்ளி மாணவி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்பட்டுள்ளது. பதினோராம் வகுப்பு படித்து வந்த மாணவி ரம்யாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த கொங்கரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன். இவருக்கு பதினொன்றாம் வகுப்பு படிக்கும் ரம்யா என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில், பச்சையப்பன் மகள் ரம்யா கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார். இதனை அடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். மேலும், மலிகம்பட்டு கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் தன்னுடைய மகளை கடத்தி சென்று விட்டதாகவும் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார்.

மூன்று நாட்களாக பல்வேறு இடங்களில் போலீசார் தேடி வந்தனர். அதேபோல், மகளை தேடி பெற்றோரும் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். 

இந்நிலையில், இன்று காலை செஞ்சி அருகே உள்ள கொங்கரப்பட்டு கிராமத்தில் பள்ளி மாணவி ரம்யா சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை காவல்துறையினருக்கு கொங்கரப்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் ஒரு பெண்ணின் சடலம் இருப்பதாக தகவல் கிடைத்தது. உடலை மீட்ட போலீசார் விசாரணை செய்ததில், அது, கடந்த 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போன 11ஆம் வகுப்பு மாணவி ரம்யா என்பது தெரியவந்தது.

இதனை அடுத்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சந்தேகப்படும் 14 பேரை விசாரணை செய்வதற்காக காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vilupuram school girl dead body in well


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->