விழுப்புரம் : உண்ண உணவில்லாமல், குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் ஒரு பிஞ்சு உயிர் துடிதுடித்து பலி.!  - Seithipunal
Seithipunal


விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், மேலத்தெரு பகுதியில் சிவகுரு என்பவருக்கு சொந்தமான தள்ளுவண்டி கடை உள்ளது. இந்த தள்ளுவண்டி கடையில் அடையாளம் தெரியாத சிறுவன் ஒருவன் கிடந்துள்ளான்.

சிறுவன் தூங்குவதாக எண்ணிய சிவகுரு, சிறுவனை எழுப்பியுள்ளார். அப்போது சிறுவன் பேச்சு, மூச்சில்லாமல் உயிரிழந்து இருப்பது தெரிவந்தது. இதனையடுத்து, உடனடியாக காவல்துறைக்கு சிவகுரு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த காவல்துறையினர், அந்த சிறுவனின் உடலை மீட்டு பிரதேபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிறுவன் யார்? எப்படி இறந்தான் என்பது குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், அந்த சிறுவன் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்த பிரதே பரிசோதனை வெளியாகி, தமிழக மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆம் அந்த சிறுவன் உண்ண உணவில்லாமல், குடிக்க தண்ணீர் இல்லாமல் துடிதுடித்து உயிரிழந்த உண்மை, அந்த சிறுவனின் பிரேத பரிசோதனை முடிவில் வெளியாகி உள்ளது. பிரேத பரிசோதனையில் சிறுவனின் உணவு பையில் சிறுதுளி கூட உணவு இல்லை என்றும், அந்த சிறுவன் தண்ணீர் குடித்ததற்கான சுவடுகளே இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் இப்படி ஒரு துயர சம்பவம் அரங்கேறி இருப்பது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உண்ண உணவில்லாமல், குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் ஒரு பிஞ்சு உயிர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதுவரை அந்த சிறுவன் யார் என்ற தகவல் போலீசாருக்கு கிடைக்கவில்லை. கைரேகை கொண்டு, ஆதார் மூலம் கண்டறிய போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். 

 

தகவலறிந்து சம்பவன் இடத்திற்க்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த சிறுவனின் உடலை மீட்டு பிரதேபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முதல்கட்ட விசாரணையில் இரவில் அந்த சிறுவனின் உடலை யாரோ அங்கு விட்டு சென்றிருக்க வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த சிறுவன் யார் என்பது குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vilupuram littlie boy dead issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->