20 வயது புள்ளிங்கோ., 30 வயது கள்ளக்காதலி.. வீட்டில் பிணம்..! தாய், தந்தையை தேடும் பிஞ்சுகள்.. கள்ளக்காதல் கொடூரமானது.! - Seithipunal
Seithipunal


கல்லூரி மாணவனுடன் கள்ளக்காதல் கொண்ட காரணத்தால், இரண்டு குழந்தைகளின் தாய் கணவனை கொலை செய்து வீட்டிற்குள் புதைத்து, 20 வயது கள்ளக்காதலனுடன் தலைமறைவான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டி பனையபுரம் காலனி பகுதியை சேர்ந்தவர் லியோ பால். இவர் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சுசிதா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். காதல் திருமண தம்பதிகள் இருவரும், சென்னையில் தங்கி பணியாற்றி வந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் வேலை பறிபோனது. 

இதனால், தங்களின் இரண்டு குழந்தைகளுடன் பிழைப்பிற்காக சொந்த ஊருக்கே திரும்பியுள்ளனர். ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதும், மனைவி குழந்தைகளை ஊரில் விட்டுவிட்டு, லியோ பால் மட்டும் சென்னைக்கு திரும்பிய நிலையில், கடந்த 6 மாதமாக ஓட்டுனர் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், புதுச்சேரியில் உறவினர் திருமண வீட்டிற்கு சென்ற லியோபாலை காணவில்லை என்று அவரது மனைவி சுசிதா தனது மாமனார் சகாய ராஜுக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். 

சென்னையில் கூலி வேலை பார்த்து வந்த சகாயராஜ் மருமகளை விக்கிரவாண்டி காவல் நிலையம் வர சொல்லி விட்டு, சென்னையில் இருந்து அவரும் விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். ஆனால், மருமகள் அங்கு வராத நிலையில், வீட்டிற்கு சென்று பார்க்கையில் அவரது இரண்டு குழந்தைகளும் தாயை காணாமல் தவித்துக் கொண்டிருந்தனர். மேலும், தாய் தங்களை விட்டுவிட்டு சென்றதாக கூறியுள்ளனர். 

மேலும், வீட்டின் பின்பக்கத்தில் குழிதோண்டி புதைத்து இருப்பது போல தடையும் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து, தனது மகனை காணவில்லை என்றும், குழந்தைகளை தவிக்கவிட்டு மருமகள் மாயமாகி விட்டதாகவும், இதில் சந்தேகம் இருப்பதாகவும் காவல்நிலையத்தில் சகாயராஜ் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சந்தேகத்திற்கிடமான இடத்தில் தோண்டியதில் தலை மற்றும் கழுத்து பகுதியில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் லியோபாலின் சடலம் கண்டறியப்பட்டது. 

குழந்தைகள் மட்டும் அக்கம்பக்கத்தில் விசாரிக்கையில், கள்ளக்காதல் விவகாரம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், பணிசூழல் காரணமாக குடும்பத்தை காப்பாற்ற காதல் கணவன் லியோ பால் வேலை தேடி சென்னைக்கு சென்று விட்ட நிலையில், பக்கத்து வீட்டில் பெண்களை கவர வேண்டும் என்ற எண்ணத்தில் விதவிதமான ஹேர் ஸ்டைல் மற்றும் கலரிங் என்று சுற்றி வந்த புள்ளிங்கோ மாணவன் ராக்கி என்ற ராதாகிருஷ்ணன், சுசிதாவை தனது காமக்காதல் வலையில் விழவைத்து தெரியவந்துள்ளது. 

கல்லூரி மாணவனின் வலையில் விழுந்த சுசிதாவும், ராக்கி என்ற ராதாகிருஷ்ணனும் பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். லியோ பால் ஊருக்கு திரும்பிய சமயத்தில், இருவரும் சந்திக்க இயலாமல் தவித்துப் போய் உள்ளனர். இதனையடுத்து கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்த மனைவி, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து உறங்கிக் கொண்டிருந்த லியோ பாலின் தலையில் இரும்பு ராடால் அடித்து கொலை செய்து, கழுத்தை அறுத்து உடலை வீட்டிற்கு பின் புறத்திலேயே புதைத்துள்ளனர். 

பின்னர், ஊராரிடம் கணவர் புதுச்சேரி திருமணத்திற்கு சென்று இருப்பதாக கதை விட்ட நிலையில், ஊராருக்கு சந்தேகம் எழுந்ததால் கடந்த 21 ஆம் தேதி குழந்தைகளை தவிக்க விட்டு 30 வயது சுசிதா தனது 20 வயது கள்ளக்காதலன் ராக்கியுடன் தலைமறைவாகியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், தாயை பிரிந்து தந்தையை இழந்த குழந்தைகள் ஆதரவற்ற நிலையில் தவித்து வருகிறது. கள்ளக்காதல் ஜோடியை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளக்காதலால் எத்தனை குடும்பம் அழிந்துள்ள செய்தி வெளிவந்தாலும், அது தினமும் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viluppuram Vikravandi Affair Murder College Student Rakki Ails Radhakrishnan Escape 30 Aged Affair girl


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->