வன்னியர் உள் இட ஒதுக்கீடு: ருத்ர வன்னியன் வேடமிட்டு வெற்றிகொண்டாட்டம்.! - Seithipunal
Seithipunal


கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பின்தங்கியுள்ள வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள்  கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக, நேற்று தமிழக சட்டப்பேரவையில் 10.5% உள்ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது பாமகவின் 40 வருட போராட்டத்துக்கு கிடைத்த முதல் கட்ட வெற்றி ஆகும்.

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% உள்ஒதுக்கீடு வழங்கப்பட்ட செய்தியை அறிந்த வன்னிய மக்கள், தாங்கள் வாழ்ந்து வரும் பகுதியில் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், தமிழக அரசுக்கும் தங்களின் நன்றியை மனமார தெரிவித்தனர்.

இந்நிலையில், வன்னிய மஹாராஜரன் வேடமிட்டு இனிப்பு வழங்கி தங்களின் மகிழ்ச்சியை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா மரக்காணம் தென்பசியார் கிராம மக்கள், பாட்டாளி மக்கள் கட்சியினர், பாட்டாளி ஊடகப்பேரவை மற்றும் தேர்தல் பணிக்குழு, வன்னியர் சங்கம் சார்பாக வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு தனி உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். 

வேள்வியில் உருவான வன்னிய மஹாராஜன் ஸ்ரீ ருத்ரவன்னியன் வேடமிட்டு இட ஒதுக்கீடு தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viluppuram Tindivanam PMK and Vanniyar Peoples Happy and Celebrate Vanniyar Agitation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->