திண்டிவனம் அருகே 7 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை..!
Viluppuram Tindivanam 7 Lakh Jewels Robbery
திண்டிவனம் அருகே 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பெலாக்குப்பம் ரோட்டில் அடகு கடை வைத்திருப்பவர் கணேசன். இவர் கடந்த 31 தேதி தனது நண்பர்களுடன் திருச்செந்தூர் சென்றுள்ளார். இவரது மனைவி தேவியும் தனது தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த தேவி, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோ உடைக்கபட்டு அதிலிருந்த பொருட்கள் சிதறி இருந்தன. உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கை ரேகை நிபுணர்கள் உதவியுடன் வீடு முழுவதும் சோதனை செய்தனர். பீரோவில் இருந்த நகைகளும் 20 ஆயிரம் பணமும் கொள்ளை போயிருப்பது தெரியவந்துள்ளது, மோப்ப நாய் உதவியுடன் வீட்டை சுற்றி தேடுதல் வேட்டை நடைபெற்றது.
மோப்ப நாய் அங்குள்ள தெருவில் சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. கணேசன் அளித்த புகாரின் பேரில் மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.
English Summary
Viluppuram Tindivanam 7 Lakh Jewels Robbery