13 வயது பச்சிளம் சிறுமி, கொடூர கொலை.. பாலியல் இச்சைக்கு இணங்க மறுத்ததால், 16 வயது கொடூரன் வெறிச்செயல்.. விழுப்புரத்தில் அதிர்ச்சி.!
Viluppuram Thiruvamathur Sozhampoondi 13 Year child Murder by Drama Lover
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருமாவாத்தூர் சோழம்பூண்டி கிராமத்தை சார்ந்த 13 வயதுடைய சிறுமி, அங்குள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில், சிறுமியின் தந்தை நேற்று முன்தினம் காலை நேரத்தில் வழக்கம்போல கட்டிட பணிகளுக்கு சென்றுள்ளார். தாயார் நூறுநாள் பணிக்காக சென்றுள்ளார். வீட்டில் சிறுமியின் தம்பி மற்றும் தங்கை விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர்.
இந்த நிலையில், மாலை சுமார் 3 மணியளவில் சிறுமி வீட்டில் தனியாக இருந்த நிலையில், அதே பகுதியை சார்ந்த வாய் பேச இயலாத மற்றும் காது கேட்காத 16 வயது காமுக கொடூரன், சிறுமியின் இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்துள்ளான். கொடூர காமுகன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்யவே, சிறுமி காப்பாற்றக்கூறி அலறியுள்ளார். உடனடியாக அங்கிருந்த துணியை சிறுமியின் வாயை பொத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளான்.
ஆனால், சிறுமியின் மறுப்பு காரணமாக ஆத்திரமடைந்த காமுகன், அங்கிருந்த கத்தரிக்கோலால் சிறுமியின் வயிறு, கழுத்து, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளான். இதனால் சிறுமி இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், சிறுமியின் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், சிறுவன் இரத்த கறைபடிந்த கத்தரியுடன் நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, அவனை பிடித்துள்ளனர்.
பணிக்கு சென்ற பெற்றோர் விஷயத்தை அறிந்து பதறியபடி வந்து, மகளின் உடலை கட்டியணைத்து அழுதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் கிடைக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் சிறுவனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற நிலையில், சிறுவன் சிறுமியை கடந்த சில மாதமாக ஒருதலையாக காதலித்து வந்ததும், இது குறித்து அறிந்த சிறுமி தனது பெற்றோரிடம் விஷயத்தை தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து சிறுவனை கண்டித்த சிறுமியின் பெற்றோர்கள், சிறுவனின் பெற்றோரிடமும் இது குறித்து தெரிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையில், வீட்டில் தனியாக இருந்த சிறுமியை காமுகன் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்து, கொலை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Viluppuram Thiruvamathur Sozhampoondi 13 Year child Murder by Drama Lover