இது புது ரூட்டாவுள்ள இருக்குது.. முதியவரின் சமயோஜித தெளிவு.. மாஸ்க்கின் மரண மாஸ் சம்பவங்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் துவக்கத்தில் அதிகளவு இருந்த கொரோனா வைரஸின் தாக்கமானது தற்போது குறைய துவங்கியுள்ளது. கொரோனாவின் ஆரம்பக்கட்டத்தில் இருந்த பாதிப்பை சுட்டிக்காட்டினால் மிகவும் அதிகமாக இருந்தாலும், கொரோனா தொற்று உச்சகட்ட தாக்கத்தை வெளிப்படுத்திய பின்னர் அதுவாகவே குறைய துவங்கும். 

தற்போது மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திருப்ப துவங்கியுள்ளனர். 

ஆனால், கொரோனாவை கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கையும் தேவையாகி இருப்பதால், மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சானிடைசரை உபயோகம் செய்யவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், மாஸ்க் அணிய சொல்லிய சம்பவத்தில் பல சிரிப்பு சம்பவங்களும் நடைபெற்றது. இதில், சிலர் கர்சீப்பை மாஸ்க் போல அணிந்து வந்த நிலையில், சிலர் உள்ளாடைகளையும் அணிந்து இருந்த நிலையில், வயதான நபரொருவர் தான் கொண்டு வந்த கைப்பையை மாஸ்க் போல அணிந்துகொண்டார். இது குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viluppuram New Type Mask Trending in Social Media


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->