விழுப்புரம்: மரக்காணத்தில் பாமக பிரமுகர் வெட்டி படுகொலை..! - Seithipunal
Seithipunal


பாமக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியை சார்ந்தவர் பாரதி. இவர் பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகர் ஆவர். இன்று காலை இவர் சாலையில் சென்று கொண்டு இருக்கையில், இவரை மர்ம கும்பல் ஒன்று இடைமறித்து தகராறு செய்துள்ளது. 

தகராறு செய்த மர்ம கும்பல், தான் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதத்தால் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது. கொலையை அரங்கேற்றிய கும்பல் அங்கிருந்து தப்பி செல்லவே, தகவல் அறிந்த மரக்காணம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். 

பாரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த வைத்த காவல் துறையினர், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இக்கொலை எதற்காக நடைபெற்றது? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viluppuram Marakkanam PMK Party Member Murder Police Investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->