கடனை கேட்டதால் கூலித்தொழிலாளி தற்கொலை.. கடனை வசூலிக்க சென்றவரும் விசாரணை பயத்தில் தற்கொலை..!
Viluppuram Man Suicide due to Loan Torture 8 July 2021
விழுப்புரம் மாவட்டத்தில் வளவனூர் அருகேயுள்ள நரையூர் கிராமத்தை சார்ந்தவர் ரவி (வயது 40). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர், வளவனூரை சார்ந்த உமா என்ற பெண்மணிக்கு, வட்டிக்கு பணம் வசூல் செய்து கொடுக்கும் பணியையும் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், உமாவிடம் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருபுவனை கிராமத்தை சார்ந்த இளங்கோ என்பவர் கடன் வாங்கியிருந்துள்ளார். அவர் கடனை திரும்ப செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். கடனை கேட்டு அவ்வப்போது உமாவும், ரவியும் இளங்கோவை சந்தித்து வந்துள்ளனர்.
பல மாதமாக ஆகியும் கடன் தொகை வராததால் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இளங்கோவை நேரில் சந்தித்த உமா மற்றும் ரவி, அவரை மிரட்டி இருக்கின்றனர். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகிய இளங்கோ தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருபுவனை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், கடன் தொல்லையால் இளங்கோ இறந்ததை உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து, உமாவை கைது செய்தனர்.
இந்த சூழலில், உமா கைதான தகவல் ரவிக்கு தெரியவரவே, காவல் துறையினர் தன்னையும் கைது செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் ரவி கோலியனூரில் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Viluppuram Man Suicide due to Loan Torture 8 July 2021