அமரேந்திர எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகிய நான் - கள்ளக்குறிச்சியில் மாஸ் போஸ்டர்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் மே மாதத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆளும் கட்சியாக இருந்து வரும் அதிமுக மற்றும் எதிர்க்கட்சியாக இருந்து வரும் திமுக தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

தங்களின் கட்சியினரை முழுவீச்சில் தேர்தல் பணிகளில் ஈடுபட அறிவுறுத்தியுள்ள நிலையில், இரண்டு கட்சிகளும் தங்களுக்கான வாக்குகளை பல்வேறு விதமான வழிகளில் வியூகம் வகுத்து சேகரித்து வருகிறது. 

அந்தந்த பகுதிகளில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டங்களில், வருகைதரும் நபர்களை ஆதரித்து அக்கட்சியினர் போஸ்டர் ஒட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்,  கள்ளக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 

இதன்போது, இரண்டாவது முறையாக பதவி ஏற்பது போல பேனர் ஓட்டப்பட்டது. இந்த பேனரில், பாகுபலி திரைப்படத்தின் கதாநாயகன் படைத் தளபதியாக பொறுப்பேற்று, "அமரேந்திர பாகுபலி ஆகிய நான்" என்ற வாசகத்துடன் பதவியேற்பார். இதனைப்போல "எடப்பாடி பழனிச்சாமி ஆகிய நான்" என்ற வார்த்தையுடன் மீண்டும் முதல்வராக பொறுப்பு ஏற்பது போல அந்த போஸ்டரில் ஒட்டப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viluppuram Kallakurichi Edappadi Palanisamy Election Poster Like Bahubali Movie


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->