உல்லாசமும் அனுபவித்துவிட்டு, நகையையும் ஆட்டைய போட்டு சென்ற கள்ளக்காதலன்.. திண்டிவனத்தில் பகீர் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தை அடுத்துள்ள விழுக்கம் கிராமத்தை சார்ந்தவர் முருகன். இவரது மனைவி கன்னியம்மாள் (வயது 55). முருகன் புற்றுநோயால் பதிப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

இதனால் விழுக்கம் பகுதியில் கன்னியம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று கன்னியம்மாள் மர்ம மனிதரால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு பிணமாக இருந்துள்ளார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், கன்னியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கிய நிலையில், தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த விசாரணையில், கன்னியம்மாளின் இல்லத்திற்கு மேல்மருவத்தூர் பகுதியை சார்ந்த இன்னலூரை சார்ந்த சரவணன் (வயது 49) என்பவர் அடிக்கடி வந்து செல்வது தெரியவந்துள்ளது. 

அவரை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், 10 வருடங்களாக சரவணனிற்கும், கன்னியம்மாளுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்த நிலையில், நகைக்காக கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. சம்பவத்தன்று கன்னியம்மாளும் - சரவணனும் மது பானம் அருந்திய நிலையில், கடன் பிரச்சனையை சரி செய்ய அவரது தாலியில் உள்ள நகையை எடுக்கும் முயற்சியில் கொலை அரங்கேறியுள்ளதும் தெரியவந்துள்ளது. 

சரவணனிற்கும் ஏற்கனவே விமலா என்ற மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ள நிலையில், கள்ளத்தொடர்பால் இன்று சிறையில் கம்பியென்னும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viluppuram Illegal Affair Murder Police Investigation


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->