வரதட்சணை கொடுமை: 6 மாத கைக்குழந்தையுடன், கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட பெண்மணி.!!
Viluppuram girl suicide with 6 month child baby
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணத்தை அடுத்துள்ள முருக்கேரி பகுதியை சார்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி யுவராணி. இவர்கள் இருவருக்கும் 6 மாத குழந்தை இருக்கிறது. பாலகிருஷ்ணன் ஜவுளி வியாபாரம் செய்து வந்த நிலையில், மனைவியிடம் வரதட்சணை கேட்டு வந்துள்ளார்.
தனது மனைவியிடம் வரதட்சணையாக கூடுதல் நகை மற்றும் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு சமயத்திற்கு மேல் ஆத்திரமடைந்த யுவராணி விரக்தியில் இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மீண்டும் இவர்களுக்குள் தகராறு ஏற்படவே, கோபாலகிருஷ்ணன் பணிக்கு சென்றதும், வீட்டில் உள்ள கிணற்றில் யுவராணி தனது ஆறு மாதமேயாகும் கைக்குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். கோபாலகிருஷ்ணனின் தந்தை மதிய உணவிற்காக வீட்டிற்கு வருகையில் மருமகள் மற்றும் பேரனை காணாது தேடியுள்ளார்.
வீட்டின் பின்புற பகுதியில் சென்று பார்க்கையில் இருவரும் கிணற்றில் பிணமாக மிதந்துள்ளனர். இதனையடுத்து இது குறித்து பிரம்மதேசம் காவல் துறையினருக்கு தகவல் கிடைக்கவே, தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Viluppuram girl suicide with 6 month child baby