பள்ளி சிறுமி பாலியல் பலாத்காரம்.. நாடகக்காதலன் கைது.!!
Viluppuram girl sexual abuse drama lover arrest by police
அரங்கண்டநல்லூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் வெளிவந்துள்ளது. தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அரகண்டநல்லூர் கிராமத்தைச் சார்ந்தவர் சூர்யா. இதே பகுதியில் 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்த நிலையில், சிறுமியிடம் பழகி வந்த சூர்யா, காதலிப்பதாக கூறி பல ஆசை வார்த்தைகளை அளந்துவிட்டுள்ளான். இவனது பேச்சில் மயங்கிய சிறுமியும், சூர்யாவும் காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், சிறுமியிடம் திருமண ஆசைகாட்டிய காமுகன், சிறுமியை பெங்களூருவுக்கு கடத்தி சென்றுள்ளான். சிறுமியை காணாது தேடியலைந்த பெற்றோர், இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்கையில், சிறுமியை சூர்யா பெங்களூருக்கு அழைத்து சென்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பெங்களூருவுக்கு சென்ற காவல் துறையினர், சிறுமியை மீட்டனர்.
பின்னர் விழுப்புரத்திற்கு அழைத்து வந்து மேற்கொண்ட விசாரணையில், சிறுமியை சூர்யா பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சூர்யாவின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சூர்யாவை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Viluppuram girl sexual abuse drama lover arrest by police