நிதி நிறுவனத்தில் லாக்கர் மாயம்.. சிறகடித்து பறந்த கொள்ளை கும்பல்.. செஞ்சியில் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


செஞ்சியில் லாக்கருடன் நிதி நிறுவனத்தில் துணிகர கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் சுமார்ட் பைனான்ஸ் பேங்க் (Smart Finance Bank) என்ற நிதி நிறுவனமானது செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில், அப்பகுதியை சார்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களின் நகைகள் மற்றும் நிலங்களை அடகு வைத்து பணம் பெற்று வந்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை பணியை முடித்துவிட்டு, நிதி நிறுவன ஊழியர்கள் அனைவரும் வழக்கம்போல தங்களின் இல்லங்களுக்கு சென்றுள்ளனர். திங்கட்கிழமையான இன்று நிறுவனத்திற்கு மீண்டும் வந்த நிலையில், நிதி நிறுவனத்தின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்க்கையில், பணம் வைத்திருந்த லாக்கர் மாயமாகியுள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த செஞ்சி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

மேலும், நள்ளிரவு நேரத்தில் இக்கொள்ளை அரங்கேறியுள்ளது என்றும், லாக்கரில் இருந்த ரூ.6 இலட்சம் பணத்தை லாக்கருடன் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பதாகவும் காவல் துறையினர் முதற்கட்ட விசாரணை தகவலில் தெரியப்படுத்தியுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viluppuram Gingee Smart Finance Bank Locker Robbery with 6 Lakh Money Police Investigation


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->