#BigBreaking: தகாத உறவில் பிறந்த மகன் தந்தையை போல இருந்ததால் ஆத்திரம்.. மகனை அடித்து கொடுமை.. சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு.!!
Viluppuram Gingee Mother Thulasi Beat Son Police Investigation Court Order to Jail
பெற்றெடுத்த மகனை கொடூரமாக தாக்கிய தாயை சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி மனலப்பாடி மதுரா மோட்டூர் கிராமத்தை சார்ந்தவர் வடிவழகன் (வயது 37). ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தூரை சார்ந்த பெண்மணி துளசி (வயது 22). இவர்கள் இருவருக்கும் கடந்த 2016 ஆம் வருடம் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த தம்பதிகள் இருவருக்கும் கோகுல் என்ற 4 வயது மகனும், பிரதீப் என்ற 2 வயது மகனும் என 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் துளசி தனது தாயாரின் வீட்டில் இரண்டாவது மகன் பிரதீப்புடன் வசித்து வந்துள்ளார். நேற்று தனது மகன் பிரதீப்பை துளசி சரமாரியாக தாக்கி இருக்கிறார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கணவர் வழங்கிய புகாரின் பேரில் சத்தியமங்கலம் காவல் துறையினர் ஆந்திர பிரதேசத்தில் உள்ள சித்தூர் ராமப்பள்ளிக்கு சென்று துளசியை கைது செய்து தமிழகம் அழைத்து வந்தனர். அவரிடம் விசாரணை நடத்திய பிறகு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
இந்நிலையில், பெற்ற குழந்தையை மனிதாபிமானம் இல்லாமல் தாக்கிய கொடூர தாயினை நீதிமன்றத்தில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 15 நாட்கள் சிறையில் அடைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ள நிலையில், அவருக்கு மனநல பாதிப்பு இல்லை என்பதும் மருத்துவ பரிசோதனையில் உறுதியானது.
மேலும், தகாத உறவினால் பிறந்த குழந்தை தனது கணவரின் ஜாடையில் இருந்ததால் குழந்தையை தாக்கியதாக தாயார் துளசி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விஷயம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Viluppuram Gingee Mother Thulasi Beat Son Police Investigation Court Order to Jail