கந்துவட்டி கடன் தொல்லையால் குடும்பத்தோடு தற்கொலை.. விழுப்புரத்தில் பேரதிர்ச்சி சோகம்.!
Viluppuram Family members Mass Suicide due to Usury interest Loan
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் புதூர் பகுதியை சார்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் மோகன். மோகன் தச்சு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி யமுனேஸ்வரி.
இவர்கள் இருவருக்கும் நித்ய ஸ்ரீ, ராஜ ஸ்ரீ என்ற பெண் குழந்தையும், சிவபாலன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக தச்சு தொழிலாளியாக பணியாற்றி வந்த மோகனிற்கு குடும்பத்தை கவனித்துக்கொள்ள நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து கடன் வாங்கி குடும்பம் நடத்தி வந்த நிலையில், கடன் கொடுத்தவர்கள் தொல்லையால் அக்கடனை அடைக்க கந்துவட்டி வாங்கியுள்ளார். இதன்பின்னர் கந்துவட்டி தொல்லை கழுத்தை நெறிக்க, குடும்பத்திற்கே பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகிய மோகன், நேற்று இரவின் போது தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த மோகனின் குடும்பத்தினர் பெரும் சோகத்திற்கு உள்ளாகினர்.
மோகனின் தந்தை கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மோகன், யமுனேஸ்வரி, குழந்தைகள் நித்யஸ்ரீ, ராஜஸ்ரீ, சிவபாலன் ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Viluppuram Family members Mass Suicide due to Usury interest Loan