15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவன்.. விழுப்புரத்தில் கொடூரம்.!!
Viluppuram child sexual abuse police investigation
ஆலம்பாடி அருகே 17 வயது சிறுவன், 15 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கியதாக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான்.
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலம்பாடி கிராமத்தில் 15 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இதே பகுதியில் 17 வயது சிறுவனும் வசித்து வருகிறான். சிறுமியும், காமுக 17 வயது சிறுவனும் இயல்பாக பழகி வருவதாக பெற்றோர்கள் எண்ணியிருந்தார்.
இந்நிலையில், சிறுமியின் செயல்பாடுகளில் ஏற்பட்ட மாற்றத்தை அடுத்து, சந்தேகமடைந்த சிறுமியின் தாய் அங்குள்ள மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளார். இதில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையறிந்து அதிர்ச்சியடைந்த தாய், இது குறித்து சிறுமியிடம் விசாரித்த நேரத்தில், 17 வயது சிறுவனின் கொடூரங்கள் தெரியவந்துள்ளது. இந்த சூல்நிலையிலேயே, சிறுமி குறித்த விஷயத்தை மருத்துவர்கள் காவல் துறையினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறுவனை கைது செய்த காவல் துறையினர், விழுப்புரம் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Viluppuram child sexual abuse police investigation