விழுப்புரம்: கணவருடன் தினமும் தகராறு..! இளம்பெண் மன உளைச்சலால் தற்கொலை..! - Seithipunal
Seithipunal


குடும்ப தகராறால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் அருகே உள்ள முத்தம்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் பிரியா என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு வயதில் மகள் இருக்கிறாள்.

பிரியாவிற்கும் அவரது கணவர் சக்திவேலுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் பிரியா மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரியா விஷம் குடித்து மயங்கிகிடந்துள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் பிரியாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு பிரியாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பயனளிக்காமல் பிரியா உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்த திண்டிவனம் கோட்டாசியருக்கு பரிந்துரை செய்துள்ளனர். குடும்ப தகராறால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viluppuram Brahmadesam Woman Suicide due to Family Problem Police Investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->