விழுப்புரம்: எஸ்.ஐயின் உல்லாச வாழ்க்கை.. எஸ்.பி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் குதித்த மனைவி.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அவலூர்பேட்டை காவல் நிலையத்தில், காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் இளங்கோவன். புதுச்சேரியை சார்ந்த பெண்மணி இந்துமதி. இவர்கள் இருவருக்கும் கடந்த 2019 ஆம் வருடம் திருமணம் நடைபெற்று முடிந்தது. 

திருமணம் முடிந்த 5 ஆவது மாத்திலேயே இளங்கோவனுக்கு பெண்களுடன் தொடர்பு இருக்கும் விஷயம் இந்துமதிக்கு தெரியவரவே, கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இளங்கோவன் இந்துமதியை அடித்து துன்புறுத்தியுள்ளார். 

இந்நிலையில், இந்துமதியின் பெற்றோர் வழங்கிய நிலத்தினை ரூ.2 கோடிக்கு விற்பனை செய்த இளங்கோவன், இந்துமதியை பிரிந்து உல்லாசமாக வாழ்ந்து வருவதாக இந்துமதி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பல முறை கணவரை சேர்ந்து வாழ அழைத்தும் பலனில்லை. 

இதனால் மிகுந்த மன வேதனையடைந்த இந்துமதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளார். விரக்தியடைந்த இந்துமதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்திற்கு முன்னர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viluppuram Avalurpettai Police SI Elango wife Protest at SP Office 18 June 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->