தாயிடம் சண்டை.. மெரீனாவுக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம்.. பானிபூரி வியாபாரி என்ற காமக்கொடூரன்.!
Viluppuram 16 Aged Child Girl Sexual Abused by Panipuri Sales Person Chennai Marina Beach Last Year Dec Month
தாயிடம் கோபித்துக்கொண்டு சென்னை சென்ற சிறுமி காமுகனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், அவர் கர்ப்பமான பின்னர் விஷயம் வீட்டாருக்கு தெரியவந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த 16 வயது சிறுமி, திடீரென வயிற்று வலியால் அவதிப்பட தொடங்கியுள்ளார். இதனைகவனித்த சிறுமியின் தாயார், அவரை மருத்துவ பரிசோதனைக்கு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அனுமதி செய்தனர்.
மருத்துவர் மேற்கொண்ட பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது உறுதியாகவே, சிறுமியின் தாயார் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். பின்னர், இதுகுறித்து செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், விசாரணையை தொடங்கியுள்ளனர்.
விசாரணையில், சிறுமி கடந்த வருடம் டிசம்பர் 26 ஆம் தேதி தாயாரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு சென்றுள்ளார். அங்கு, மெரினா கடற்கரையில் சிறுமி இருக்கையில், பானிபூரி விற்பனை செய்து வந்த காமுகன், சிறுமியிடம் பேச்சுக்கொடுத்து ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து, சிறுமிக்கு துயரம் நடந்த இடம் சென்னை என்பதால், திருவெல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வழக்கு மாற்றம் செய்யப்படவே, சென்னையில் உள்ள மீனம்பாக்கம் திரிசூலம் ஏரிக்கரை பகுதியை சார்ந்த ஆறுமுகம் (வயது 22) என்ற காமுகனை காவல் துறையினர் போக்ஸோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Viluppuram 16 Aged Child Girl Sexual Abused by Panipuri Sales Person Chennai Marina Beach Last Year Dec Month