பட்டாகத்தி பர்த்டே செலிபிரேஷன்.. வழக்கறிஞரை கொத்தோடு தூக்கிய காவல்துறை.!!
Villupuram Lawyer birthday celebration
தமிழகத்தின் விழுப்புரத்தை சார்ந்தவர் பிரபு.. இவர் வழக்கறிஞராக பணியாற்றி வரும் நிலையில், இவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். பிறந்தநாளுக்கு கேக் வெட்டுகையில் பட்டா கத்தியுடன் கேக் வெட்டி வீடியோ பதிவு செய்துள்ளனர்.
இந்த விஷயம் குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பெரும் வைரலாகவே, இதனைக்கண்ட விழுப்புரம் தாலுகா காவல் துறை அதிகாரி வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின்னர் இது குறித்து விசாரணை மேற்கொள்ளையில், கீழப்பெரும்பாக்கம் பகுதியை சார்ந்த பிரபு என்பது தெரியவந்துள்ளது.
சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ காட்சிகளின் அடிப்படையில் பிரபு மற்றும் அவரது நண்பர்கள் 12 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து ஐந்து பேரை கைது செய்துள்ளனர். மீதமுள்ள நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Villupuram Lawyer birthday celebration