நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் நெருங்கி பழக்கம்.. உள்ளே தூக்கிவைத்த காவல்துறை.!!
Villupuram girl sexual abuse police arrest culprit
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பாத்திரப்புலியூர் கிராமத்தை சார்ந்தவர் அப்பாவு. இவரது மகன் வடிவேலன் (வயது 30). இவருக்கும், திண்டிவனத்தில் உள்ள மரக்காணம் சாலை இந்திரா நகர் பகுதியை சார்ந்த பெண்மணிக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதியன்று உறவினர்கள் முன்னிலையில் நிச்சயம் செய்ய தேதியும் குறிக்கப்பட்டுள்ளது. திருமண நிச்சயத்திற்கு பின்னர் இருவரும் பேசிவந்த நிலையில், தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
இதில் ஆசை வார்த்தை கூறி வடிவேலன் பெண்ணை உல்லாசத்திற்கு இணங்க வைத்த நிலையில், இதனால் பெண்மணி கர்ப்பமாகியுள்ளார். இந்த விஷயத்தை பெண்மணி தனது வருங்கால கணவருக்கு தெரியப்படுத்தவே, திடீரென தானாக கருத்து வேறுபாடை ஏற்படுத்திக்கொண்டு விலக முயற்சி செய்துள்ளான்.
இதனால் திருமணத்தில் தடை ஏற்பட்ட நிலையில், உறவினர்களிடம் பேசியும் பலன் இல்லை. இதனையடுத்து பெண்மணி இது குறித்து திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் வடிவேலனை கைது செய்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Villupuram girl sexual abuse police arrest culprit