விழுப்புரம் ஆரோவில் அற்புதம்..! பொதுமக்களை கவரும்..புதிய விற்பனை..!  - Seithipunal
Seithipunal


ஆரோவில் சர்வதேச நகரில் இருக்கும் ஒரு சில நிறுவனங்கள் மருத்துவம் சார்ந்த உடைகளை தயார் செய்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளன.

அழகிய கடற்கரைக்கும், தியானத்திற்கும் புகழ்பெற்றது விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஆரோவில் சர்வதேச நகரம். காஸ்மோ நகரமான பாண்டிச்சேரிக்கு அருகே இந்த இடம் இருப்பதால் இங்கே அதிகப்படியான வெளிநாட்டினரை காணமுடியும்.

ஆரோவில் சர்வதேச நகரில் துளசி உள்ளி, வேப்ப இலை போன்ற மருத்துவகுணம் மிக்க பொருட்களால் உருவாக்கப்பட்ட ஆடைகள் விற்பனைக்கு வந்துள்ளன. பொதுமக்களுக்கு இங்குள்ள சில நிறுவனங்கள் மருத்துவம் சார்ந்த ஆடைகளை தயாரித்து விற்கின்றன.

உள்ளூர் மக்களுக்கு மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி நாட்டினைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் இந்த ஆடைகளை வாங்கி மகிழ்கின்றனர். மருத்துவ குணமிக்க ஆடை என்பதால் மக்கள் இதனை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இந்த மருத்துவ குணமிக்க ஆடைகளால் தேகத்தில் தோல் நோய்களுக்கு தீர்வாக அமையும். மேலும், எந்தவித பாதிப்பிற்கும் உடல் ஆளாகாது என்று ஆடை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VILLUPURAM AUROVIL DRESS SALES


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->