திருட்டு பணத்தில் ஆன்லைன் ரம்மி.. கொள்ளையர்களின் பகீர் வாக்குமூலம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் தெற்கு நெற்குன்றம் கிராமத்தைச் சார்ந்தவர் காளிங்கன், பிரசாந்த். இவர்கள் இருவரும் ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் ஊழியராக புதுச்சேரியில் பணியாற்றி வந்துள்ளனர். 

இந்நிலையில், திண்டிவனம் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியின் நான்கு ஏ.டி.எம்மில் பணம் நிரப்பும் பணியானது இவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த சில மாதமாக பணிக்கு வராமல் இருந்துள்ளார். இவர்களது அலைபேசியை அணைத்து வைக்கப்பட்டிருந்ததால், சந்தேகம் அடைந்த அதிகாரிகள், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இருப்பை தனியாக சோதனை செய்துள்ளனர். 

இந்த சோதனையில், பல மாதமாக குறிப்பிட்ட தொகை பணம் நிரப்பாமல் இருந்தது இருந்துள்ளது. மேலும், பிரசாந்த் மற்றும் காளிங்கன் ஏ.டி.எம்மில் பணம் நிரப்பாமல் கையாடல் செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. 

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில்,  ஏ.டி.எம்.மில் ரூ.78 லட்சம் கையாடல் செய்யப்பட்டதும், இந்த பணம் ஆன்லைன் ரம்மி விளையாடி தோற்று விட்டதும் தெரிய வந்துள்ளது. மேலும், பணத்தை மறைத்து வைத்து இவர்கள் நாடகம் ஆடலாம் என்ற சந்தேகத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Villupuram ATM Money theft man spend online Rummy game


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->