காரில் சிறுமி மூவரால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. விழுப்புரத்தில் பயங்கரம்.!!
Villupuram 18 years girl sexual abuse by gang police investigation
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கேடார் பகுதியை சார்ந்தவர் முருகையன். இவரது மகனின் பெயர் சுரேஷ். இவன் நேற்று மதிய நேரத்தில், அதே பகுதியை சார்ந்த 18 வயது சிறுமிக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு சுடிதார் வாங்கி வந்துள்ளதாக கூறியுள்ளான். மேலும், அந்த சுடிதாரை அங்குள்ள அலமேலு என்பவரின் நிலத்திற்கு வருமாறு கூறியுள்ளார்.
இதனை நம்பிய பெண்மணியும், சுபாஷ் தெரிந்த நபர் என்பதால் சந்தேகம் இல்லாமல் சென்றுள்ளார். இந்த நிலையில், அங்கு ஏற்கனவே வந்திருந்த சுபாஷின் நண்பர்கள் விக்னேஷ் மற்றும் பழனிவேலின் மகன் சுபாஷ் (வயது 22) ஆகியோர் அங்கு காத்திருந்துள்ளனர். இளம்பெண் அங்கு வந்ததும், அவரை கத்தி முனையில் மிரட்டி காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும், இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டிய நிலையில், சிறுமி இது குறித்து செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மூன்று காமுகன்களை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இவர்கள் உபயோகம் செய்த காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Villupuram 18 years girl sexual abuse by gang police investigation