திருவாரூர்: கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவில் விஜய தசமி சிறப்பு பூஜை., திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!!
Vijayathasami Special Dharisam In Saraswathi amman Temple
விஜய தசமியை முன்னிட்டு சரஸ்வதி அம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
விஜய தசமி நாளில் குழந்தைகளின் கல்வியை தொடங்க உகந்த நாளாக கருதப்படுகிறது. திருவாரூர் மாவட்டம், கூத்தனூரில் அமைந்துள்ள சரஸ்வதி அம்மன் கோவிலில் காலை முதலே பக்தர்கள் வருகைபுரிந்தனர்.
கோவில் பிரகாரத்தில் தாம்பூலத்தில் நெல்லைக் கொட்டி அதில் தங்கள் குழந்தைகளை எழுத வைத்து அவர்களின் கல்வியில் நல்ல நிலைக்கு வர வேண்டும் என பிராத்தனை செய்தனர்.
தமிழகத்தில் கல்வி கடவுள் சரஸ்வதி இருக்கும் ஒரே கோவில் என்பதால் வெளிமாவட்டத்தில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய வருகை புரிந்து வருகின்றனர்.பக்தர்கள் வருகை அதிகமாக இருந்ததால் அங்கு 20 மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
English Summary
Vijayathasami Special Dharisam In Saraswathi amman Temple