எல்லாத்துக்கும் ரெடி., தாரளமா பன்னுங்க.! விஜயகாந்த் பரபரப்பு அறிவிப்பு.!
vijayakanth Tweet about College
கொரோனா நோயாளிகளுக்காக தங்களது ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இந்த அறிவிப்பில், வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய இடவசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமண்டூர் பகுதியில் அமைந்துள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை அரசு தாராளமாக நோயாளிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தின் பொழுதும் நோயாளிகளுக்காக கல்லூரியை பயன்படுத்திக் கொள்ள அவர் அனுமதி அளித்ததாகவும், அதே போல இந்த ஆண்டும் நான் வழங்குவதாகவும் இதுகுறித்து அனைத்து உதவிகளையும் நோயாளிகளுக்கு செய்ய தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
vijayakanth Tweet about College