குற்றவாளிக்கு இந்த தண்டனை வழங்குங்கள்.. வருத்தத்தில் கொந்தளிக்கும் விஜயகாந்த்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறுமதுரை பகுதியை சார்ந்தவர் ஜெயபால் என்பவரது மகளின் பெயர் ஜெய ஸ்ரீ (வயது 15). சிறுமி ஜெய ஸ்ரீ அங்குள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் நிலையில், இவரது பெற்றோர் நேற்று வெளியூருக்கு சென்றுள்ளார். 

சிறுமி வீட்டில் தனியாக இருந்த நிலையில், வீட்டில் இருந்து கரும் புகை அதிகளவு வெளியேறுவதை அக்கம் பக்கத்தினர் கண்டுள்ளனர். இதனையடுத்து அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்க்கையில், சிறுமியின் உடலில் தீப்பற்றி இருந்துள்ளது. சிறுமியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதிக்கவே, சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 

நீதிபதியிடம் இதே கிராமத்தை சார்ந்த கணபதி என்பவனின் மகன் முருகன் (வயது 51) மற்றும் கந்தசாமி என்பவனின் மகன் யாகசம் என்ற கலியபெருமாள் (வயது 60) பெட்ரோல் ஊற்றி எரித்தாக வாக்கு மூலம் தெரிவித்ததை அடுத்து, மேல் சிகிச்சைக்கு சிறுமி சென்னையில் உள்ள கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

பெட்டோர்களின் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் முருகன் மற்றும் கலியபெருமாளை கைது செய்துள்ளனர். இந்த நிலையில், சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மறைவு தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது அறிக்கையில், " விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தில், வீடு புகுந்து 10 வகுப்பு பயிலும் 14 வயது சிறுமியின் கைகளை கயிற்றால் கட்டி போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவத்தை கேள்வியுற்று, மிகவும் மனவேதனை அடைந்தேன். மேலும், தந்தையிடம் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக சிறுமியை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியது எந்த வகையில் நியாயம்?. 

எனவே இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயல்கள் எங்கும் நடைபெறாத வண்ணம் அந்த மனித மிருங்கங்களுக்கு, உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும். மேலும் சிறுமி ஜெயஸ்ரீயை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் " என்று கூறியுள்ளார்..

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijayakanth angry about villupuram jayashree murder case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->