'கொரோனா அப்டேட்' : அமைச்சரின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!!
vijayabaskar says about corona virus in tamilnadu
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி ஆயிரக்கணக்கானோரை பலி வாங்கி வருகிறது. இந்நிலையில் இந்தியாவிற்குள் வந்த கொரோனா பெங்களூரு, கேரளா, டெல்லி, தமிழ்நாடு போன்ற பகுதியில் அறிகுறி இருப்பதாக உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்து கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் தமிழகத்தில் கொரோனாவின் நிலை என்ன? என்பதை கண்காணித்து மக்களுக்கு தெரிவித்து வருகிறார்.
தொடர்ந்து இது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் ''தமிழகத்தில் இதுவரை கொரோனா அறிகுறி இருந்தவர்களை பரிசோதனை செய்ததில் அனைத்தும் நெகடிவ் ரிப்போர்ட்டாகவே வந்துள்ளது.
மேலும் கொரோனாவில் இருந்து விடுபடுவதற்கு அனைத்துவிதமான நடவடிக்கைகளும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்று குறிப்பிட்டிருந்தார். இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பரவிவரும் வைரஸ் தற்போது தமிழகத்தில் யாருக்கும் வைரஸ் இல்லை'' என்று சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். அமைச்சரின் இந்த ட்விட்டால் தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
English Summary
vijayabaskar says about corona virus in tamilnadu