வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு அதிரடி கட்டுப்பாடு.. அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை.!!
Vijayabaskar gives warning of NRI members
கரோனா வைரஸானது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் இதன் தாக்கம் மக்களை அதிகளவு பாதித்துள்ளது. தற்போது வரை 7 பேர் பலியாகியுள்ளனர். 425 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிற நாடுகளில் பணியாற்றி வரும் நபர்களை சிறிது சிறிதாக மத்திய, மாநில அரசுகள் மீட்டுக்கொண்டு வரும் நிலையில், இவர்களுக்கு சோதனை செய்து வீட்டில் தனிமைப்படுத்தவும், மருத்துவமனையில் சிகிச்சை பெறவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் இரயிலில் பயணம் செய்த விபரம் தெரியவந்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக மேலும் பிரச்சனை எழுந்து, வைரஸ் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி கட்டுப்பாடு விதித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் விஜயபாஸ்கர், வெளிநாடுகளில் இருந்து திரும்பும் நபர்கள், வெளியே நடமாடும் பட்சத்தில், குறித்த நபரின் பாஸ்போர்ட் முடக்கம் செய்யப்படும் என்றும், கடந்த ஒரு மாதத்திற்குள் வெளிநாட்டில் இருந்து திரும்பிய நபர்கள், வீட்டில் தங்களை தனிமைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது..
Tamil online news Today News in Tamil
English Summary
Vijayabaskar gives warning of NRI members