"வாரிசு" திரைப்படம் வெற்றி பெற விஜய் ரசிகர்கள் தோப்புக்கரணம் போட்டு பிரார்த்தனை..!! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  நடிகர் விஜய் மற்றும் அஜித்குமார் படங்கள் 8 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் வெளியாகி நேரடியாக மோதுவது அவர்களின் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இரண்டு படங்களுக்கும் சரிசமமாக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் விஜய் மற்றும் அஜித் குமார் ரசிகர்கள் பல்வேறு வேண்டுதல்கள் மற்றும் விளம்பரங்களை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள "வாரிசு" திரைப்படம் வெற்றி பெற வேண்டி மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலின் விநாயகர் சன்னதியில் விஜய் ரசிகர்கள் 108 தோப்புக்கரணம் போட்டு பிரார்த்தனை செய்துள்ளனர். மேலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு செய்த விஜய் ரசிகர்கள் கோயில் வளாகத்தில் அனைவருக்கும் அன்னதாமும் வழங்கியுள்ளனர். விஜய் ரசிகர்களின் இத்தகைய செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay fans praying for the success of Varisu movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->