தற்கொலை செய்த தளபதி ரசிகர்.! காரணத்தை கேட்டு கண்ணீர் விடும் திரையுலகம்.!
vijay fan suicide in rishivandhiyam
நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு, கோலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ரிஷிவந்தியம் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞரான பாலா கடந்த சில மாதங்களாகவே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அவர் மிகுந்த சோகத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கின்றனர். கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், "தலைவன் படத்தை பார்க்காமலேயே போறேன். தலைவனையும்.. லவ் யூ தலைவா." என்று டுவிட் செய்து அதில் விஜய் பெயரை குறிப்பிட்டுள்ளார்.
அதே நாளில் தனது ட்வீட்களில் இங்கிருக்கும் ஒருவருக்காவது என்னை பிடிக்குமா? நான் என்ன அவ்வளவு மோசமான மனிதனா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருக்கிறார் பாலா. இந்த இளம் வயதில் மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்ட பாலாவை நினைத்து விஜயின் நண்பரும், நடிகருமான சிரஞ்சீவி மற்றும் நடிகர் சாந்தனு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் விஜய் ரசிகர்களும் தற்கொலை செய்து கொள்வது எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது என்று உருக்கமாக அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
vijay fan suicide in rishivandhiyam