உடை மாற்றிய நர்ஸ்... உள்ளே புகுந்த ஆசாமி செய்த விபரீதம்.! பொதுமக்கள் அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


நாகர்கோவில் அருகில் ஆசாரிபாளையத்தில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை ஒன்று இருக்கின்றது. இங்கே பணிபுரிந்து வரும் நர்ஸுகள் உடை மாற்றிக்கொள்ள ஓட்டு கட்டிடம் ஒன்று ஒதுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையில், அந்த உடை மாற்றும் அறை அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு மர்ம நபர் நின்றுள்ளார்.

அப்போது பொதுமக்கள் அவரை அழைத்து விசாரிக்கையில், தன்னுடைய மனைவி இங்கு நர்சாக இருக்கின்றார். அவர் உள்ளே உடை மாற்றிக் கொண்டிருக்கிறார். அவருக்காகத்தான் நான் காத்திருக்கிறேன் என்று அந்த வாலிபர் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய பொதுமக்களும் அங்கிருந்து அகன்றனர். அவர்கள் சென்ற பின்னர் தன் செல்போனில் இருக்கும் கேமராவை கொண்டு ஜன்னல் வழியாக நர்சுகள் உடை மாற்றுவதை படம் பிடித்து இருக்கின்றார். இதனை கண்ட நர்ஸ் ஒருவர் அலற ஓடி வந்த பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து இருக்கின்றனர்.

பிறகு, அந்த வாலிபர் காவல்துறையிடம் ஒப்படைக்க பட்டார் .அவருடைய செல்போனை பறிமுதல் செய்த காவல்துறையினர் வீடியோக்களை டெலிட் செய்து விட்டு அந்த நபரை சிறையில் அடைத்து வைத்திருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

video capturing in dress changing room of nurse in nagarkoil


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->