சோளிங்கர் தொகுதி மாற்றுக்கட்சி வேட்பாளர் பாமகவில் இணைவு.. தலைமை அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள பாமக தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியினர் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் மற்றும் இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். 

பாட்டாளி மக்கள் கட்சியில் திமுக கட்சியை சார்ந்தவர்கள், பிற அமைப்பை சார்ந்த பலரும் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். மேலும், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத்தந்த விஷயத்தை முன்னிறுத்தியும், திமுக போன்ற கட்சிகளின் வன்னியர் இட ஒதுக்கீடு எதிர்ப்பு விஷம பிரச்சாரம் தொடர்பாக பேசி வரும் சர்ச்சை கருத்துக்களாலும், பாமகவில் பலரும் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில், சுயேட்சை வேட்பாளார் பாமகவில் இணைந்தார். சோளிங்கர் தொகுதியில் மாவீரன் ஜெ.குரு வன்னியர்சங்கம் (வி.ஜி.கே.மணி) சார்பில் தேர்தலில் போட்டியிட்ட A.பழனி அவர்கள் பாமகவில் தன்னை இணைத்துக்கொண்டார். மேலும், பாமகவின் வேட்பாளர் அ.ம.கிருஷ்ணன் அவர்களுக்கு முழு ஆதரவு தருவதாகவும் வெற்றி பெற அயராது உழைப்பேன் எனவும்  உறுதியளித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VGK Mani Supporter Sholingur Candidate Join PMK Today 31 March 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->