கீழே கிடந்த மாஸ்கால் கொரோனாவின் பிடியில் சிக்கிய குடும்பம்.. 20 வயது இளைஞனின் செயலால் விபரீதம்.!!
Vellore youngster used use and throw mask family members all are positive corona
தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி சிவராஜ் நகர் பகுதியில் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் 60 வயதுடைய குடும்ப தலைவர் மற்றும் 60 வயதாகும் மனைவி மற்றும் 20,19 வயது மகன், 15 வயது மகள் என ஐவர் வசித்து வந்துள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் கடந்த 22 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், கொரோனா வைரஸ் தொற்றால் அனைவரும் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் வேலூரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களுக்கு கொரோனா வைரஸ் எப்படி பரவியது என்பது தொடர்பாக சுகாதாரத்துறையினர் விசாரணை மேற்கொண்டு இருந்துள்ளனர். இதில், காட்பாடி பகுதியில் உள்ள ஒட்டப்பிள்ளையார் கோவில் தெரு பகுதியில், மேற்கூறிய குடும்பத்தில் 20 வயது மகன் முகக்கவசம் அணியாமல் நடந்து சென்றுள்ளார்.
காவல் துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட நிலையில், முகக்கவசம் குறித்து காவல் துறையினர் வினவுவார்கள் என்று எண்ணி, அங்கு கீழே கிடந்த முகக்கவசத்தை எடுத்து பயன்படுத்தியுள்ளார்.
இதன்பின்னர் வீட்டிற்கு சென்ற இவரிடம் இருந்து, குடும்பத்தினருக்கு ஒட்டுமொத்தமாக கொரோனா பரவியுள்ளது தெரியவந்துள்ளது. முகக்கவசம் உபயோகம் செய்த பிறகு பாதுகாப்பான முறையில் அகற்றப்படாத பட்சத்தில் என்ன விதமான பாதிப்புகள் ஏற்படும் என்பதை இது தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் காவல் துறையினரிடம் குறைந்த விலையிலான பொதுவான மாஸ்குகளை அரசு கொள்முதல் செய்து, முகக்கவசம் அணியாமல் வரும் நபர்களிடம் அபராதம் வாங்கிய பின்னர், மாஸ்க்கை அணிவித்தால் இது போன்ற விளைவுகளில் இருந்து தப்பிக்க இயலும்.
கீழே கிடக்கும் மாஸ்க்குகளை எடுத்து உபயோகம் செய்து, காவல் துறையினரிடம் தப்புவதாக எண்ணி, குடும்பத்தையே கொரோனாவின் பிடியில் சிக்கவைத்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Vellore youngster used use and throw mask family members all are positive corona