தந்தையும், பிள்ளைகளும் விபத்தில் உயிரிழக்க, தாய் இரயிலில் பாய்ந்து தற்கொலை.. வேலூரில் சோகம்.!
Vellore Woman Suicide at Train His Father and Children Death an Accident Past week
பட்டாசு கடை விபத்தில் தனது தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்த பெண்மணி, தற்கொலை செய்துகொண்ட சோகம் அரங்கேறியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள லத்தேரி பேருந்து நிலையத்தில் மோகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை இருந்தது. கடந்த 1992 ஆம் வருடம் முதல் மோகன் தன் மகள் வித்யா பெயரில் இந்த பட்டாசு கடையை நடத்தி வந்த நிலையில், கடந்த 18 ஆம் தேதி மோகன் கடைக்கு பட்டாசு வாங்க வந்த சிலர், புதிய ரக பட்டாசுகளை வெடித்து காட்டுமாறு கூறியுள்ளனர்.
இதனிடையில், பேரன்கள் தனுஷ் மற்றும் தேஜஸ் பட்டாசு கடைக்குள் இருந்த நிலையில், வாடிக்கையாளர்களின் முன்னர் கடைக்கு அருகே மோகன் பட்டாசை வெடித்துள்ளார். இதில், பட்டாசு தீப்பொறி கடைக்குள் இருந்த பட்டாசுகள் மீது பட்டு, அது வெடித்து சிதறியுள்ளது.
பட்டாசு கடையில் தீப்பற்றிய நிலையில், தனது பேரன்களை காப்பாற்ற முயன்ற மோகன் மற்றும் உள்ளே சிக்கியிருந்த தனுஷ் மற்றும் தேஜஸ் என மூன்று பேரும் பரிதாபமாக பலியாகினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், மூவரின் சடலங்களை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இவர்களின் உடல் கடந்த 19 ஆம் தேதி குடும்பத்தினரால் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், தந்தை மற்றும் இரண்டு மகன்களை பறிகொடுத்த மோகனின் மகள் வித்யா, மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார். உறவினர், நண்பர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வந்த நிலையில், பெற்ற தந்தையும், தான் பெற்றெடுத்த குழந்தைகளையும் ஒரே சமயத்தில் பறிகொடுத்த வித்யா மன உளைச்சலால் இன்று அதிகாலை இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Vellore Woman Suicide at Train His Father and Children Death an Accident Past week