நண்பன் என நம்பி வீட்டிற்குள் விட்டதற்கு, தங்கையை காதல் கண்ணாலம் செய்த பாசமிகு தோழன்.! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை அச்சமங்கலம் மாக்கனூர் பகுதியை சார்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் சிவா (வயது 27). சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி ரங்கனூர் பகுதியை சார்ந்தவர் ராஜா. ராஜாவும் - சிவாவும் கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒன்றாக பணியாற்றி வருகின்றனர். 

இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வந்த நிலையில், இதன் அடிப்படையில் ராஜா சிவாவை அவ்வப்போது தனது வீட்டிற்கு அழைத்து சென்று வந்துள்ளார். இந்நிலையில், ராஜாவின் தங்கையான பிரியாவுக்கும் (வயது 21) - சிவாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இவர்கள் இருவரும் கடந்த 3 வருடமாக காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரம் தற்போது பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக பிரியா - சிவா காதல் ஜோடி வீட்டினை விட்டு வெளியேறி, அங்குள்ள அச்சமங்கலம் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்துள்ளனர்.

இந்த விஷயம் தொடர்பாக பிரியாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காதல் ஜோடி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்து பாதுகாப்பு கேட்டுள்ளது. விசாரணை நடத்திய காவல் துறையினர் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேசிய நிலையில், பிரியா காதல் கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்தார். இதனால் பிரியா அவரது காதல் கணவர் சிவாவுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore Jolarpet Police Station Love Couple Want Protection due to Love Marriage 20 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->