மகள் மீதான பாசத்தால் பேசிய பெற்றோர்.. புதுமாப்பிள்ளை தரப்பு கெடுபிடியால், காதல் திருமணம் செய்தவர் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


மகளை சில நாட்கள் வீட்டில் தங்கவைக்க ஆசைப்பட்ட பெற்றோர் ஆடி மாதத்தை மேற்கோள் காண்பிக்க, இருதரப்பு வீட்டாருக்கிடையே ஏற்பட்ட பிரச்சனை மணமகனின் உயிரை காவு வாங்கிய சோகம் அரங்கேறியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை தாமலேரிமுத்தூர் பகுதியை சார்ந்தவர் திலீபன் (வயது 33). இவர் திருப்பத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் சர்வேயராக பணியாற்றி வருகிறார். இதே பகுதியை சார்ந்த பெண்மணி திவ்யா. திவ்யா எம்.பி.பி.எஸ் பயின்றுள்ளார். இவர்கள் இருவரும் கடந்த பல வருடமாக காதலித்து வந்துள்ளனர். 

இதனையடுத்து, காதல் ஜோடிகள் தங்களின் காதலை வீட்டில் தெரியப்படுத்த, எந்த எதிர்ப்பும் இல்லாமல் பெற்றோர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்கு பின்னர் திவ்யா ஜோலார்பேட்டையை அடுத்துள்ள புள்ளானேரி பகுதியில் உள்ள மினி கிளினிக்கில் தற்காலிக மருத்துவராக பணிக்கு சேர்ந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 15 ஆம் தேதி ஆடி மாதத்தையொட்டி திவ்யாவின் பெற்றோர் அவரை தங்களின் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். திலீபனின் குடும்பத்தினர் கடந்த 18 ஆம் தேதி மாமியார் வீட்டிற்கு சென்று திவ்யாவை அழைத்து வர சென்றுள்ளனர். 

பிள்ளையின் மீது வைத்திருந்த பாசத்தால், கூடுதலாக சில நாட்கள் திவ்யாவை பார்த்துக்கொள்ள ஆசைப்பட்ட பெற்றோர்கள் ஆடி மாதம் முடிந்ததும் திவ்யாவை வீட்டிற்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ளாத திலீபனின் தரப்பால் அங்கு பிரச்சனை உருவாகியுள்ளது. 

இருதரப்பும் வாக்குவாதம் செய்துகொண்ட நிலையில், மனமுடைந்த நிலையில் வீட்டிற்கு வந்த திலீபன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாடிக்கு சென்ற மகன் நீண்ட நேரம் ஆகியும் கீழே வராததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மேலே சென்று பார்க்கையில் மகன் தூக்கிட்டு நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். 

மகனின் உடலை கட்டியணைத்து பெற்றோர்கள் கதறியழவே, இதனைக்கேட்டு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினருக்கு விபரீதம் புரிந்துள்ளது. இதனையடுத்து, இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த ஜோலார்பேட்டை காவல் துறையினர் திலீபனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருமணம் நடந்த 7 மாதத்தில் மாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்ட சோகம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காதலிக்கும் போது நொடிப்பொழுது மணிக்கணக்காக தெரிந்தாலும் அப்போது இருந்த பொறுமை திருமணத்திற்கு பின்னரும் வேண்டும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore Jolarpet New Married Man Dhilipan Works as Govt Surveyor Suicide due to Family Fight


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->