சந்தேகம் தீர்ப்பதாக கூறி, கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய காமுக பேராசிரியர்.. குடியாத்தத்தில் பயங்கரம்.!!
Vellore Gudiyatham College Girl Sexual Torture by Lecturer
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில் கடந்த சில வருடமாக ஆங்கிலத்துறை பேராசிரியராக பணியாற்றி வந்தவர் ரமேஷ். இவருக்கு சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜமுனாமரத்தூர் கூட்டந்தூர் ஆகும்.
இவர் தற்போது குடியாத்தம் நகர் பகுதியில் வசித்து வரும் நிலையில், இக்கல்லூரியில் பணியாற்றி வரும் 19 வயது மாணவியை, தினமும் பாடம் சம்பந்தமாக சந்தேகம் தீர்க்க வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.
இதனை நம்பிய மாணவியும் பேராசிரியர் தங்கியுள்ள காந்திநகர் பகுதி இல்லத்திற்கு சென்ற நிலையில், காமுக பேராசிரியர் ரமேஷ் மாணவியிடம் அத்துமீற முயற்சித்துள்ளார். அவனிடம் இருந்து தப்பிய மாணவி, வீட்டிற்கு வந்து பெற்றோர்களிடம் நடந்ததை கூறி கதறியழுதுள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், அங்குள்ள குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து காமுகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Vellore Gudiyatham College Girl Sexual Torture by Lecturer