கரோனா எப்போது சரியாகும்... ஆம்பூரில் ஆவேசத்துடன் குறி சொன்ன பத்ரகாளி...!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸ் சீனாவில் இருக்கும் யூகான் நகரின் இறைச்சி விற்பனை சந்தையில் இருந்து பரவியதாகவும், இந்த வைரஸிற்கு முதன் முதலாக இறால் விற்பனை செய்த பெண்மணி பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் இந்த வைரஸின் பரவளில் பெரும் அதிர்ச்சி தகவலாக இது சீனாவால் திட்டமிடப்பட்டு பரப்பப்பட்டது அல்லது சீனாவில் உள்ள யூகான் நகர வைராலஜி ஆய்வகத்தில் இருந்து தவறுதலான விளைவால் அல்லது திட்டமிட்டே பரப்பிரயிருக்க வேண்டும் என்றும், சீனாவின் அணுஆயுதமற்ற உயிரி போர் என்றும் உலக நாடுகளில் பெரும்பாலாவை சரமாரி குற்றசாட்டை வைக்க துவங்கியுள்ளது. 

இந்த வைரஸால் 2,940,059 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 203,803 பேர் சிகிச்சை பலனின்றி மரணடமடைந்துள்ளனர். இந்த வைரஸிற்கான தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் உலக நாடுகளே இணைத்து செயலலாற்றி வருகிறது. இந்த நிலையில், வேலூரை சார்ந்த பெண்மணி அம்மன் அருள் வந்துள்ளதாக கூறி சாலையில் வளம் வந்த நிலையில், இந்த பிரச்சனை சரியாக 7 மாதம் ஆகும் என்று தெரிவித்துள்ளார். 

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் எடுக்கப்பட்டதாக வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இந்த வீடியோ காட்சியில் ஆக்ரோஷமாக சாலையில் நடந்து வரும் பெண்மணி, கரோனாவால் இன்னும் பலர் பாதிக்கப்படுவார்கள் என்றும், கலியுகத்தின் ஆரம்பம் இது என்றும், கலியுகத்தின் துவக்கத்திற்கு பின்னர் பெரும் அழிவு ஏற்படும் என்றும், இன்னும் 7 மாதத்திற்கு பின்னரே கரோனாவிற்கான மருந்து கண்டறியப்பட்டு, கரோனா கட்டுக்குள் வரும் என்றும் தெரிவித்தார். 

மேலும், சிவனின் சூட்சமம் காரணமாக இது ஏற்பட்டுள்ளது என்றும், 7 மாதத்திற்கு பின்னர் மட்டுமே இதற்கு முடிவு வரும் என்றும், பாவிகள் அதிகரித்துவிட்டனர் என்றும், திருட்டு, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் கொலை அதிகரித்துள்ளது என்றும், உன்னை நான் சோதித்தால் மற்றொருவன் திருந்துவான் என்றும், எங்களின் சினத்தை அனைவரும் சீண்டிவிட்டனர், கோவில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டது எங்களின் சூழ்ச்சி என்றும், மேற்கு திசையில் இருக்கும் அனைத்து கிராமமும் நோய்வாய்ப்படும். 

மனிதனின் செயல்பட்டால் இந்த நோயை அளிக்க முடியாது என்றும், 7 மாதத்திற்கு மக்கள் சிரமத்தை அனுபவித்து, அனைவரும் நல்வழிக்கு வரும் பட்சத்திலேயே அனைத்தும் சரியாகும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vellore god kali speech about corona virus


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->