வீட்ல 100 ரூபாய் கூட வைக்க மாட்டியா? - பணம் கிடைக்காத விரக்தியில் திருடன்கள் ஆவேசம்.. லெட்டரில் கொக்கரிப்பு.!
Vellore DuraiMurugan House Robbery Thief Wrote Letter 16 April 2021
துரைமுருகனின் வீட்டில் திருட வந்த கொள்ளையர்கள், அருகே இருக்கும் கெஸ்ட் ஹவுசுக்கு சென்று அங்கும் எதுவும் கிடைக்காத ஆத்திரத்தில், 100 ரூபாய் கூட வைக்க மாட்டியா? என எழுதி வைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை புதூர் கிராமத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு சொந்தமாக விருந்தினர் இல்லம் இருக்கிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக மர்ம நபர்கள் இங்கு வந்து வீட்டின் கதவு மற்றும் பூட்டை உடைத்து திருட முயற்சித்த நிலையில், அங்கு எதுவும் கிடைக்காததால் அங்கிருந்த சிசிடிவி காமிரா மற்றும் ஹார்ட் டிஸ்கை திருடிச் சென்றனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக எஸ்.பி விஜயகுமார் உள்ளிட்ட காவல்துறையினர் தலைமையில் 5 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
வாணியம்பாடி பள்ளி தாளாளருக்கு சொந்தமான விருந்தினர் இல்லத்தில், சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்தது. இதனைக்கண்ட காவல்துறையினர் அங்கு பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது உறுதியான நிலையில், பணம் மற்றும் நகை எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்து, அங்கிருந்து டிவியை உடைத்து விட்டு சென்றுள்ளனர்.
மேலும், அங்கு வைத்து மதுபானம் அருந்திவிட்டு லிப்ஸ்டிக்கால் நூறு ரூபாய் கூட வைக்க மாட்டியா? என்று சுவரிலும், அங்கிருந்த காகிதத்தால் ஒரு ரூபாய் கூட இல்லை என்று எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Vellore DuraiMurugan House Robbery Thief Wrote Letter 16 April 2021