ஒரே ஒரு லிங்க், மொத்த செல்போனும் ஹேக்.! இளைஞரின் நிர்வாணா புகைப்படத்தை காட்டி மிரட்டிய வேலூர் மாணவன் கைது.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம், பட்டரைபெருமந்தூரைச் சேர்ந்த 32 வயது இளைஞர் ஒருவர் தனது முகநூலில், ஆபாச பக்கத்தில் தனது விவரங்களை பதிவு செய்துள்ளார். அப்போது அவரை தொடர்பு கொண்டு பெண் போல் பேசிய நபர் ஒருவரிடம், தனது வாட்ஸ்அப் எண்களை பகிர்ந்துகொண்டார்.

நாளடைவில் அவர்கள் இருவரும் வாட்ஸ்அப் மூலம் பழகி வந்துள்ளனர். மேலும் இருவரும் ஒரு கட்டத்தில் தங்களுடைய ஆபாச புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். 

இந்த நிலையில் பெண் போல் பேசி அந்த நபர், வாலிபரின் செல்போன் எண்ணுக்கு ஒரு லிங்க் ஒன்றை அனுப்பியுள்ளார். அதனை அந்த வாலிபர் கைது செய்து உள்ளே சென்றதும், அவரின் போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

மேலும், அவரின் செல்போனிலிருந்த அனைத்து வீடியோக்களும் திருடப்பட்டு விட்டது. இதனை அடுத்து பெண் போல் பேசி அந்த நபர், அந்த இளைஞரை பணம் கேட்டு அவரை மிரட்ட தொடங்கி உள்ளார். இதனை அடுத்து அந்த வாலிபர் திருவள்ளூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

கடந்த ஒரு மாதமாக நடந்து நடைபெற்ற இந்த விசாரணையில், தற்போது அந்த பெண்போல பேசிய வாலிபனை போலீசார் கைது செய்துள்ளனர். 

அந்த வாலிபன் ராணிப்பேட்டை மாவட்டம், புளியங்கன்னு கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நரேந்திரநாத் என்பதும், அவர் வேலூரில் உள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருவதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்து உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vellore college student arrest for crime


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->