மயக்க ஸ்ப்ரே அடுத்து சிறுமி பாலியல் பலாத்காரம்.. கல்லூரிக்கு வர சொல்லி அரங்கேறிய கொடூரம்..!
Vellore child girl sexual abuse by college staff
வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி குப்பம் பகுதியை சார்ந்த 16 வயது சிறுமி, அங்குள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் வருடம் பயின்று வந்துள்ளார். இவர் கடந்த 16 ஆம் தேதியன்று அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார். இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனைக்கேட்டு பெற்றோர்களும் அதிர்ச்சியடைந்த நிலையில், குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் சென்று விசாரணை மேற்கொண்டதில், " கடந்த மார்ச் மாதம் கல்லூரிக்கு ரெக்ராட் நோட்டு கொண்டு வர கூறி சிறுமியின் தந்தை அலைபேசிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுமி கல்லூரிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
அங்கு வாயில் உள்ள வடுகன்தாங்கல் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் முகத்தில் மர்ம நபர் மயக்க ஸ்ப்ரே அடித்துள்ளார். பின்னர் நினைவு திரும்பியதும் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். மேலும், அருகே இருந்த கல்லூரி ஊழியரிடம் இது குறித்து தெரிவிக்கையில், அவர் இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதனால் நடந்த விஷயத்தை சிறுமி வெளியே கூறாமல் இருந்து வந்த நிலையில், சிறுமி கர்பிணியாகியுள்ளார். இந்த வழக்கில் கல்லூரியில் பணியாற்றி வந்த மேலாளர் பிரதாப் (வயது 25) என்ற கொடூரனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Vellore child girl sexual abuse by college staff